நகைக்கடைக்குள் புகுந்த போலி ஐ.டி.அதிகாரிகள்... இரண்டரை கிலோ நகை அபேஸ்.. ஆந்திராவில் பரபரப்பு

x

ஆந்திராவில் வருமானவரித் துறை அதிகாரிகள் எனக் கூறி, நகைக்கடைக்குள் புகுந்த கும்பல், இரண்டரை கிலோ தங்க நகைகளுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..


செகந்திராபாத்தில் உள்ள ஒரு நகை கடைக்குள் புகுந்த 4 பேர் கொண்ட கும்பல், வருமானவரித்துறை அதிகாரிகள் எனக் கூறி கடை உரிமையாளரை மிரட்டியுள்ளனர். பின்னர், அங்கிருந்த ஊழியர் இருவரை ஒரு மூலையில் உட்கார வைதத அந்த கும்பல், கடையில் சோதனை இடுவது போல் நடித்துள்ளனர். அதனை தொடர்ந்து, வரவு, செலவு கணக்குகள் சரிவர இல்லை எனக் கூறி, இரண்டரை கிலோ நகைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடிய நிலையில், சந்தேகத்தின் பேரில் கடை உரிமையாளர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, போலி வருமான வரித்துறை அதிகாரிகள் 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்