தமிழகத்தில் அடுத்தடுத்து சிக்கும் போலி டாக்டர்கள் - மக்களே உஷார்

x

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் முறையாக மருத்துவம் படிக்காமல் போலி மருத்துவம் பார்த்து வந்த பலரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ராஜேந்திரன் என்பவர் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக போலீசில் புகாரளிக்கப்பட்டது. இதனடிப்படையில், சோதனை மேற்கொண்ட போலீசாருக்கு, ராஜேந்திரன் போலி மருத்துவம் பார்த்தது தெரியவர, அவரை கைது செய்தனர். தொடர்ந்து, முறையாக மருத்துவம் படிக்காமல், நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த கடலூர், செல்லங்குப்பம் புதுநகரை சேர்ந்த மதியழகன் மற்றும் கொய்யாதோப்பு தெருவை சேர்ந்த காந்தரூபன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேலச்சேரி கிராமத்தில் நோயாளிகளுக்கு மெடிக்கலில் மருத்துவம் பார்த்த மனோகர் என்பவரையும், சேலம் சங்ககிரி பகுதியை சேர்ந்த போலி மருத்துவர்கள் பன்னீர் செல்வம் மற்றும் தேவராஜன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்