12ம் வகுப்பு மட்டும் படித்துவிட்டு மருத்துவம்..போலி மருத்துவரை தொக்காக தூக்கிய போலீஸ்

x

கிருஷ்ணகிரியில் 12ம் வகுப்பு மட்டும் படித்துவிட்டு, மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர். இருதுக்கோட்டை கிராமத்தில் மருத்துவக் குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, அஸ்வத் நாராயணன் என்பவர், மெடிக்கல் ஷாப்பில் தனி அறை அமைத்து, நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. விசாரணையில், அவர் 12ம் வகுப்பு மட்டுமே படித்திருந்தது தெரியவந்த நிலையில், அவரை போலீசார் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து, கிளினிக்கிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்