போலி வரவு புத்தகம்..! 1 கோடி ரூபாய் பணத்தை சுருட்டிய அஞ்சலக அதிகாரி... தஞ்சாவூரில் அதிர்ச்சி தகவல்

x

கும்பகோணம் அருகே உடையாளூர் கிராமத்தில் உள்ள அஞ்சலகத்தில் வினோத் குமார் என்பவர் 7 ஆண்டுகளாக, அஞ்சலக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அவரிடம் அப்பகுதியைச் சேர்ந்த பலர், அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் செலுத்த வேண்டிய பணத்தை கொடுத்துள்ளனர். ஆனால், வினோத் குமார் மக்களிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொண்டு, போலி புத்தகத்தில் வரவு வைத்து கொடுத்துள்ளார். இந்நிலையில், அஞ்சலகம் சென்று வரவு வைக்கப்பட்ட புத்தகத்தை காண்பித்த போது, பணம் செலுத்தியவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர். இது குறித்து உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏறத்தாழ சுமார் 1 கோடி ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்