11 ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி..மாணவி உடலை எரித்த உறவினர்கள் - கொலையா? தற்கொலையா ?

x

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே தேர்வில் தோல்வியடைந்ததால் 11 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருவாலங்காடை சேர்ந்த 16 வயதான மாணவி புவனேஸ்வரி, திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று 11 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாணவி தேர்வில் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்து காணப்பட்ட அவர், வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசாரிடன் தகவல் தெரிவிக்காமலேயே மாணவியின் உடலை எரித்து உறவினர்கள் இறுதி சடங்குகள் செய்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவி உயிரிழந்தது கொலையா? தற்கொலையா? என விசாரணை நடத்தி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்