கடைக்கு வரும் பெண்கள் மீது கண்... மனைவியையே தூண்டிலாக பயன்படுத்திய கணவன் - போலீஸ் ஸ்டேஷன் சென்று கதறிய மகன்கள் சென்னையில் பயங்கரம்

x

சென்னை மணலியை சேர்ந்த திருமலை என்பவர், சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அதே பகுதியில் டெய்லர் கடை நடத்தி வரும் நிலையில், இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளது. இந்நிலையில், மனைவியின் டெய்லர் கடைக்கு வரும் பெண் வாடிக்கையாளர்களை, தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபட வைக்குமாறு தொடர்ந்து திருமலை வலியுறுத்தி வந்திருக்கிறார். இந்த தொல்லை நாளுக்கு நாள் அதிகரிக்கவே, சம்பவத்தன்று மனைவியை தாக்கிய நிலையில், இதை தட்டிக்கேட்ட அவரது மூத்த மகனை திருமலை கட்டையால் தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து திருமலையின் மனைவி மற்றும் மகன் அளித்த புகாரின் அடிப்படையில் திருமலையை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்