கண்களை கவரும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி | இசை கலைஞர்கள் வைத்த கோரிக்கை? | NELLAI

x

கொரோனா காலத்தில் திருவிழாக்களில் நாட்டுப்புற கலைகள் நடத்த விதிக்ககப்பட்ட கட்டுப்பாடு இன்னமும் தொடர்கிறது என்றும், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை இரவு முழுவதும் நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என்று, தமிழ்நாடு நாட்டுப்புற இசை கலைஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

நெல்லை மாவட்ட நாட்டுப்புற கலைஞர்கள் முன்னேற்ற நலச்சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா நெல்லையில் நடைபெற்றது. இதில், பரதநாட்டியம், கரகாட்டம் , நாதஸ்வரம் என பார்வையாளர்களை கவரும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சிவகுமார், திருவிழாக்களில் கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்