அதி தீவிர புயலானது 'பிபோர்ஜாய்' - விமானநிலைய ஓடுபாதை மூடல்

x

அரபிக்கடலில் அதி தீவிர புயலாக பிபோர்ஜாய் வலுப்பெற்றுள்ளதால், மேற்குகடற்கரை பகுதிக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேரள மாநிலம் முதல் மகாராஷ்டிரா வரை மேற்குகடற்கரை பகுதியில் மழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்நிலையில், மும்பையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏர் இந்தியா விமானங்கள் பல ரத்து செய்யப்பட்டுள்ளன. மும்பை விமான நிலையத்தின் ஓடுபாதையும் மூடப்பட்டுள்ளது. பேரிடர் இடையூறுகளை குறைக்கும் முயற்சியில், பயணிகளுக்காக ஏற்பாடும் அசவுகரியங்களுக்கு வருந்துவதாக ஏர் இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்