கடலில் மீனவர் வலையில் சிக்கிய வெடிபொருள்! - புதுக்கோட்டை அருகே பரபரப்பு

x

அறந்தாங்கி அருகே மீனவர் வலையில் சிக்கிய வெடிபொருள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியை சேர்ந்த மானவர்கள், பைபர் படகில் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.

மீனவர்கள் கடலில் சுமார் 6 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்து விட்டு, கரை திரும்பியபோது, மீன்பிடி வலையில் சிறிய அளவிலான வெடிபொருள் கண்டெடுக்கப் பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள், கடலோர காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, வெடிபொருளை கைப்பற்றிய போலீசார், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மீனவர் வலையில் வெடிபொருள் சிக்கிய சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்