பூமியில் புதைந்து கிடக்கும் வெடிபொருட்கள் - பெரியபாளையம் மக்கள் பீதி

x

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே மற்றுமொரு பழங்கால ராக்கெட் லாஞ்சர் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரியபாளையம் அடுத்த மாளந்தூர் பகுதியில் 2 நாட்களுக்கு முன் பழங்கால ராக்கெட் லாஞ்சர் கண்டெடுக்கப்பட்ட நிலையில், ஆவாஜிப்பேட்டை கிராமத்தில் குப்பன் என்பவர் தனது வீட்டின் பின்புறம் பள்ளம் தோண்டும் போது, சுமார் 2 அடி கொண்ட பழங்கால வெடிபொருள் கண்டெடுக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அந்த பொருளை கைப்பற்றி ஊருக்கு ஒதுக்குபுறமாக வைத்து கண்காணித்தனர்.

மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அதன் தன்மை குறித்து ஆய்வு செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

பெரியபாளையம் அருகே அடுத்தடுத்து வெடிபொருட்கள் கண்டெடுக்கப்படுவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்