மருத்துவமனை அருகே வெடிவிபத்து...ஆக்சிஜன் சிலிண்டரால் நடந்த விபரீதம் - அதிர்ச்சி cctv காட்சி

x

உத்தரபிரதேசத்தில் தனியார் மருத்துவமனை அருகே சிலிண்டர் வெடித்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். சந்தோலி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வெளியே திடீரென வெடி சத்தம் கேட்டதால் அங்கிருந்தவர்கள், அச்சத்தில் பதுங்கினர். அருகில் இருந்த மருத்துவமனை மற்றும் வீடுகளின் கண்ணாடிகள் உடைந்த நிலையில் வெடிவிபத்தில் இருவர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். முதற்கட்ட விசாரணையில், லாரியில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்களை இறக்கி கொண்டிருந்த போது வெடிவிபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.


Next Story

மேலும் செய்திகள்