"ஓ.பி.எஸ், டிடிவி, சசிகலா தவிர..." - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி

ஓ.பி.எஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை தவிர, மற்றவர்கள் யார் வந்தாலும் வரவேற்போம் என, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னை ராயபுரத்தில் அ.தி.மு.க சார்பில் தண்ணீர் பந்தலை ஜெயக்குமார் திறந்துவைத்து, பொதுமக்களுக்கு பழங்கள், இளநீர் உள்ளிட்டவற்றை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சி விரோத செயலில் ஈடுபடாதவர்கள் எங்களுக்கு எதிரி இல்லை என குறிப்பிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com