"அமைச்சர் PTR கூறியது அனைத்தும் அப்பட்டமான பொய்" - ஆளுநர் ஆர்.என்.ரவி

x

ஆளுநர் மாளிகை கணக்கு குறித்து தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியது அனைத்தும் அப்பட்டமான பொய் என ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்துள்ளார்.ஆளுநர் மாளிகைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடைபெற்றதாக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டியது குறித்து ஆளுநர் ஆர்என்ரவி விளக்கம் அளித்துள்ளார்.நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்ட, சிறிய மானியங்கள் என்பது கடந்த 2000 ஆவது ஆண்டே நீக்கப்பட்டு விட்டதாகவும்,ஆளுநர் மாளிகைக்கு ஒதுக்கப்படும் நிதியை குறைக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.மேலும், அட்சயபாத்திம் திட்டம் குறித்து விளக்கம் அளித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, கூடுதல் தலைமை செயலாளர் தலைமையிலான குழுவின் கண்காணிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டதாகவும்,திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் வங்கி பரிமாற்ற தரவுகளும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.குடியரசு தின தேநீர் விருந்திற்கு 30 லட்சம் ரூபாய் செல்வு செய்த‌து குறித்து விளக்கம் அளித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி,முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற தேநீர் விருந்து நிகழ்ச்சியில், அரசு உயர் அதிகாரிகள் மட்டுமே பங்கேற்றதாகவும்,ஆனால், தான் ஆளுநராக பதவியேற்ற பின் விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள், நாட்டுப்புற கலைஞர்கள் என 3 ஆயிரம் பேருக்கு தேநீர் விருந்து அளித்த‌தாகவும் விளக்கம் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்