வேலை பறிபோனதால் ஆத்திரம்.. வடமாநில தொழிலாளர்கள் மீது பயங்கர தாக்குதல் - ஈரோட்டில் பரபரப்பு

x
  • ஈரோடு மாவட்டத்தில் வடமாநில தொழிலாளர்களை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
  • கோபிசெட்டிபாளையம் அருகே கணக்கம்பாளையம் பகுதியில், 35 க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்கி கட்டிட வேலை செய்து வந்துள்ளனர்.
  • இதில், அதே ஊரைச் சேர்ந்தவர்களும் பணிபுரிந்து வந்த நிலையில், பணிக்கு சரியாக வராத காரணத்தினால் கணக்கம்பாளையத்தை சேர்ந்த இருவரை பணியில் இருந்து நீக்கியதாக கூறப்படுகிறது.
  • இதனால், ஆத்திரத்தில் இருந்த மணிகண்டன் மற்றும் ஸ்ரீகாந்த ஆகியோர், தங்களது பணிநீக்கத்திற்கு நீங்கள் தான் காரணம் என மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
  • இது குறித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த போலீசார், இருவரையும் கைது செய்த நிலையில், வடமாநில தொழிலாளர்களை தாக்குவதற்கு தூண்டியதாக கூறி பிரதாப் என்பவரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்