ராணுவ வீரர் உடலைக் கண்டு கதறிய மனைவி - "அப்பா...அப்பா" என்று துடி துடித்த பிள்ளைகள்... காண்போரை கலங்க செய்யும் காட்சி

x

ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளியைச் சேர்ந்த ராணுவ வீரர் வடிவேல் திரிபுரா பகுதியில் எல்லை பாதுகாப்பு படையில் 18 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இவருக்கு நித்யா என்ற மனைவியும், இலக்கியா, கவிப்பிரியன் ஆகிய 2 பிள்ளைகளும் உள்ளனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு கூட தனது மனைவியுடன் செல்போனில் பேசி வந்த ராணுவ வீரர் வடிவேலு கடும் குளிர் இருப்பதாக கூறியுள்ளார்... இந்நிலையில், திடீரென்று வடிவேலுவுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ராணுவ வீரர் வடிவேலுவின் உடல் திரிபுராவில் இருந்து விமான மூலமாக கோவை கொண்டுவரப்பட்டு, இன்று அவரது உடல் சொந்த ஊரான தஞ்சை ஊத்துக்குளிக்கு எடுத்து வரப்பட்டது. இறுதிச்சடங்குகள் முடிந்த பின்பு முழு ராணுவ மரியாதை உடன் உடல் தகனம் செய்யப்பட உள்ளது. வடிவேலுவின் உடலைக் கண்டு கட்டிய மனைவி கண்ணீர் வடித்த நிலையில், தங்கள் பாசத் தந்தையை இழந்து தவிக்கும் 2 பிள்ளைகளும் அப்பா...அப்பா என்று கதறியழுததைக் கண்டால் கல் நெஞ்சும் கரைந்து விடும்...


Next Story

மேலும் செய்திகள்