"நம்ம ஊருகாரங்க பாசத்துக்கு அளவு இல்ல"...குதிரைக்கு வளைகாப்பு நடத்திய மக்கள்..ஈரோடு அருகே நெகிழ்ச்சி சம்பவம் | Erode

x

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள கிராமத்தில் கோயிலுக்கு நேர்ந்து விடப்பட்ட குதிரைக்கு கிராம மக்கள் வளைகாப்பு நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... அம்மன் பாளையம் மாரியம்மன் கோயிலுக்கு நேர்த்திக் கடனாக செலுத்தப்பட்ட பெண் குதிரை தற்போது 9 மாதம் கர்ப்பமாக உள்ளது. இந்நிலையில், தங்கள் மகளுக்கோ மருமகளுக்கோ செய்வதைப் போல குதிரைக்கும் வளைகாப்பு நடத்த நினைத்த கிராம மக்கள் அதை நிகழ்த்தியும் காட்டியுள்ளனர். ஊர்வலமாக சீர்வரிசை கொண்டு வந்து புதுசேலை உடுத்தி, வளையல்கள் அணிவித்து, 7 வகை சாதம், பழங்கள் ஊட்டி வெகு விமரிசையாக வளைகாப்பை நடத்தினர். அத்துடன் உறவினர் வீட்டிற்கு சென்றால் மொய் வைப்பதைப் போலவே குதிரைக்கும் மொய் வைக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த மாரியம்மனை தரிசித்து விட்டு சென்றனர் கிராம மக்கள்.


Next Story

மேலும் செய்திகள்