கேஸ் அடுப்பில் ஏற்பட்ட பழுது... சரிசெய்ய முயன்ற தாய், மகளுக்கு நேர்ந்த விபரீதம் - ஈரோட்டில் அதிர்ச்சி

x
  • ஈரோடு மாவட்டம் பவானியில் கேஸ் அடுப்பில் பழுதை சரிசெய்த போது தீ விபத்து ஏற்பட்டதால், தாய், மகள் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.
  • லட்சுமி என்பவர், கேஸ் அடுப்பை சரி செய்ய கணேஷ் என்ற எலக்ட்ரீசியனை அழைத்துள்ளார்.
  • அடுப்பு சரியாகிவிட்டதாக நினைத்து பற்ற வைத்த போது, திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
  • இதில், லட்சுமி, அவரது மகள் ரேவதி மற்றும் கணேஷ் ஆகியோர் காயமடைந்தனர்.
  • அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்