"எலெக்சன் முடிஞ்சு தர்றேனு சொன்னாங்க.. இன்னைக்கு குடுத்துட்டாங்க" - ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள்

x

ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திமுக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், பொதுமக்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் குவிந்ததால் பரபரப்பு நிலவியது. மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். தொடர்ந்து, கனரக லாரிகளில் கொண்டுவரப்பட்ட பரிசு பொருட்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன. பரிசு பொருட்களுக்காக வழங்கப்பட்ட டோக்கன்களை கொடுத்து பொதுமக்கள் பரிசுகளை வாங்கி சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்