ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்... 25ஆம் தேதி ம.நீ.ம நிர்வாக குழு, செயற்குழு கூட்டம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்... 25ஆம் தேதி ம.நீ.ம நிர்வாக குழு, செயற்குழு கூட்டம்
x


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான நிலைப்பாட்டை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வரும் 25ஆம் தேதி அறிவிக்க உள்ளார்.

ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை தொடர்ந்து வரும் 25ஆம் தேதி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாக குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில், இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினம் கமல்ஹாசன், அவரது நிலைப்பாடு குறித்து அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்