ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - 'ஓர்க்கவுட்' செய்து வாக்கு சேகரித்த அமைச்சர்

x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, அமைச்சர் செஞ்சி மஸ்தான் உடற்பயிற்சி செய்தவாறு வாக்கு சேகரிப்பிப் ஈடுபட்டார். வரும் 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈ.வி.கே.ஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அமைச்சர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான், ஈரோடு மாவட்டம் பெரிய வலசு பகுதியில் அமைந்துள்ள உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்தவாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


Next Story

மேலும் செய்திகள்