வாக்களிக்க வந்த மாற்றுத் திறனாளி... கரடு முரடான பாதை.. ஏமாற்றமடைந்த பெண் - அடுத்த நொடியே அதிகாரிகள் செய்த நெகிழ்ச்சி செயல்

x

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், பாதை சரியில்லாததால் வாக்குச் சாவடிக்கு செல்ல முடியாமல் மாற்றுத் திறனாளி ஒருவர் திரும்பிச் சென்ற நிலையில், பாதை தற்காலிகமாக சரிசெய்யப்பட்டுள்ளது...

வீரப்பன் சத்திரம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடிக்கு சூளையைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி ஒருவர் வாக்களிக்க வந்தார்.

ஆனால், மாற்றித் திறனாளிகளுக்கான 3 சக்கர வாகனமோ அல்லது சக்கர நாற்காலியோ செல்ல பாதை இல்லாமல் கரடு முரடாக இருந்ததால் அப்பெண் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.

இது குறித்து அறிந்த அதிகாரிகள் மணலைக் கொட்டி தற்காலிகமாக பாதையை சரி செய்துள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்