காதலன் மீது ஆசிட் வீசிய காதலி... காரணத்தை கேட்டு அதிர்ந்த போலீசார்-ஈரோட்டில் பரபரப்பு

x
  • ஈரோடு மாவட்டம் பவானியில் கள்ளக்காதல் விவகாரத்தில் காதலன் மீது, பெண் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • பவானி வர்ணபுரத்தைச் சேர்ந்த சம்பத் என்பவரின் மகன் கார்த்தி, பெருந்துறையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
  • இந்நிலையில், கார்த்திக்குக்கு, அவரது உறவுக்கார பெண்ணான மீனாதேவி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது.
  • இதனிடையே, கார்த்தி வேறொரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் மீனாதேவிக்கு தெரிய வந்துள்ளது.
  • இதனையடுத்து, பணி முடிந்து வீடு திரும்பிய கார்த்தியை வழி மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட மீனாதேவி, அவர் மீது ஆசிட்டை வீசியுள்ளார்.
  • இதில், பலத்த காயமடைந்த கார்த்தியை, அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக, ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்