டீக்கடையில் தேநீர் அருந்திய ஈபிஎஸ்.. தீவிர தேர்தல் பணிக்கு நடுவே 'Chill' செய்த அதிமுகவினர்

x

ஈரோட்டில் சாலையோர கடையில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தேநீர் அருந்தினார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிகள் குறித்து, ஈரோட்டில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை நடத்தினார். இதனிடையே, ஆலோசனையை முடித்து கொண்டு சேலம் திரும்பிய எடப்பாடி பழனிச்சாமி, ஈரோடு நான்கு முனை சந்திப்பு பகுதியில், சாலையோர கடையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் தேநீர் அருந்தினார். அப்போது, அதிமுக வேட்பாளர் தென்னரசு, எடப்பாடி பழனிச்சாமி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு பிரசாரத்தை தொடங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்