ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கு - விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி

x

ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கு - விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி..!

அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரிட் மனு மீதான விசாரணையிலிருந்து நீதிபதி பிரதீபா எம்.சிங் விலகினார்.

கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு அங்கீகாரம் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி அதிமுக, எடப்பாடி பழனிசாமியின் ரிட் மனுவை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி பிரதீபா எம். சிங் விசாரித்தார். இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை பெற்று தெரிவிக்க பத்து நாட்கள் அவகாசம் தேவை என தேர்தல் ஆணையத்தின் தரப்பில் கோரப்பட்டது. இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதுடன் கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால் அவசரமாக விசாரிக்க வேண்டும் என வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களை பதிவு செய்து கொண்ட, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி பிரதீபா எம்.சிங், விசாரணையில் இருந்து விலகியதுடன், மனுவை வேறு நீதிபதி முன் புதன்கிழமை பட்டியலிடும் வகையில் தலைமை நீதிபதி அமர்வுக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்