காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம்... காதலன் வீட்டை கொளுத்திய....சரமாரியாக வெட்டிய பெண் வீட்டார் - நெய்வேலி அருகே பயங்கரம்

x

ஆதாண்டார் கொல்லை கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் மகன் ராஜதுரை என்பவரும், அதே கிராமத்தை சேர்ந்த அருள் என்பவரின் மகள் ஸ்ரீமதியும், காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த பெண் வீட்டாரின் உறவினர்கள், ராஜதுரை வீட்டை தீயிட்டு கொளுத்தியும், வீட்டில் இருந்த நான்கு ஆடுகளை அரிவாளால் சரமாரியாக வெட்டியும் உள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் ஒரு ஆடு உயிரிழந்த நிலையில், மீதமுள்ள மூன்று ஆடுகள் கழுத்தில், வெட்டுக்காயங்களுடன் உள்ளன. இது குறித்து நெய்வேலி தெர்மல் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்