ஆத்திரமடைந்து மிரட்டிய மனைவி - போலீசில் சிக்கிய கணவனின் நண்பன்

x

தீபாவளி துப்பாக்கியை காட்டி மிரட்டிய போலி நிருபர் மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினரின் கணவர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள D.வாடிப்பட்டி ஊராட்சியின் ஆறாவது வார்டு உறுப்பினராக இருப்பவர் அழகம்மாள்.

இவர், தனது வார்டுக்கு தேவையான வசதிகளை செய்துதரவில்லை எனக் கூறி, அதே பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் தங்கள் பகுதிக்கான தேவைகளை பூர்த்தி செய்யுமாறு வலியுறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த வார்டு உறுப்பினர் அழகம்மாளின் கணவர் கணேசன் மற்றும் அவரது நண்பர் வல்லரசு ஆகியோர் பாண்டியனை துப்பாக்கியை காண்பித்து மிரட்டியுள்ளனர்.

இது அனைத்தையும் தங்கள் செல்போனில் படம் பிடித்த பாண்டியனின் உறவினர்கள் போலீசில் புகாரளித்தனர்.

இதனடிப்படையில், போலீசார் இருவரிடமும் விசாரணை செய்ததில் அவர்களிடமிருந்தது தீபாவளிக்கு பயன்படுத்தப்படும் போலி துப்பாக்கி எனபதும், மேலும், வல்லரசு என்பவர் போலி நிருபர் என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்