முன்விரோத பகை... பழிக்கு பழி... நண்பனை வெட்டி ஆசையை தீர்த்து கொண்ட ரவுடி

x

ராணிப்பேட்டை அருகே முன்விரோதத்தில் நண்பனை வெட்டி கொலை செய்த ரவுடிக்கும்பலை போலீசார் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் கிராமத்தை சேர்ந்தவர் வண்டு ராஜேஷ். கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ள ரவுடியான இவரை, சோளிங்கபுரம் ரயில் நிலையத்தில் வைத்து மர்மகும்பல் வெட்டி கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விசாரணையில், கடந்த ஜூலை 10ம் தேதி சரத்குமார் என்ற இளைஞர் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் வண்டு ராஜேஷ் சிறை சென்றது தெரியவந்துள்ளது. இதில், ஏற்பட்ட முன்விரோதத்தினாலே, வண்டு ராஜேஷ் கொலை செய்யப்பட்டது தெரியவர, பாணாவரத்தை சேர்ந்த ரவுடிக்கும்பலை சுற்றி வளைத்த போலீசார், அப்புசதீஷ், தீபக்குமார் உட்பட 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்