கெத்தாக காலிறுதிக்குள் நுழைந்த இங்கிலாந்து - ஆட்டத்தை அதிர வைத்த அந்த 'கோல்'

x

நாக் அவுட் சுற்றில் செனகல் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி காலிறுதிக்கு முன்னேறியது.

ஆட்டத்தின் 38வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ஜோர்டன் ஹெண்டர்சன் முதல் கோலையும், 48வது நிமிடத்தில் ஹாரி கேன் இரண்டாம் கோலையும் அடித்தனர்.

விறுவிறுப்பாக துவங்கிய இரண்டாம் பாதியில் 57வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் புகாயோ சகா ஒரு கோல் அடித்தார்.

ஆட்ட நேர இறுதி வரை செனகல் அணி கோல் எதுவும் அடிக்காததால் 3க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் செனகல் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி காலிறுதிக்கு முன்னேறியது.


Next Story

மேலும் செய்திகள்