இன்ஜினீயரிங் வாஷ் அவுட்..? - கெத்து காட்டும் கலை, அறிவியல்

x

இன்ஜினீயரிங் வாஷ் அவுட்..? - கெத்து காட்டும் கலை, அறிவியல்

கடந்த 8ம் தேதி துவங்கிய ஆன்லைன் விண்ணப்பம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர கிட்டத்தட்ட 3 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்...

தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 07ஆயிரத்து 395 இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர, இதுவரை 1 லட்சத்து 28 ஆயிரத்து 274 மாணவிகள்,1 லட்சத்து 15 ஆயிரத்து 752 மாணவர்கள், 78 திருநங்கைகள் உட்பட 2 லட்சத்து 99 ஆயிரத்து 558 மாணவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்துள்ளனர்.

மேலும் அரசு பள்ளியில் படித்த 54 ஆயிரத்து 638 மாணவிகள் இதற்கு விண்ணப்பித்துள்ள நிலையில்,

இவர்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் கல்லூரியில் சேர்ந்தால் மாதம் ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மொழி பட்டப்படிப்பு, தமிழ் மொழியில் பயின்றவர்களுக்காக தனி தரவரிசை பட்டியலும்,

ஆங்கில மொழி பட்டப் படிப்புகளுக்கு ஆங்கிலத்தில் பெற்ற மதிப்பெண்கள், பிற இளநிலை பட்டப் படிப்புகளுக்கு மற்ற 4 பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

கல்லூரி வாரியாக தரவரிசை பட்டியல் தயார் செய்யப்பட்டு 25ம் தேதி கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட உள்ளது.

சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவில் வரும் விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கான கலந்தாய்வு 29ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஜூன் 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வும்,

ஜூன் 12ம் தேதி முதல் 20ம் தேதி வரை 2ம் கட்ட கலந்தாய்வும் நடைபெறும்.

கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை படிப்பில் முதலாம் ஆண்டில் சேர்ந்த மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 22ம் தேதி முதல் துவங்கும் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்