லைட்டாக சிரித்த இன்ஜினியர்.. சட்டென சட்டையை பிடித்து இழுத்து கன்னத்தில் பளார் விட்ட பெண் MLA

x

மகாராஷ்டிராவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற நகராட்சி அதிகாரியை சுயேட்சை பெண் எம்.எல்.ஏ. கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த பெண் எம்எல்ஏ நகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தார். அப்போது, இளநிலை பொறியாளரின் சட்டையை பிடித்து இழுத்து கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறிய பெண் எம்.எல்.ஏ, தான் கூறியதை கேட்காமல் சிரித்ததால் நகராட்சி பொறியாளரை தாக்கியதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்