அமலாக்கத்துறையின் அடுத்த அதிரடி நடவடிக்கை.. டெல்லியில் பரபரப்பு

x

மதுபான கொள்கை ஊழல் முறைகேடு வழக்கு தொடர்பாக மணீஷ் சிசோடியா, அமன்தீப் சிங் தல், ராஜேஷ் ஜோஷி, கௌதம் மல்ஹோத்ரா ஆகியோருக்கு சொந்தமான 52 கோடியே 24 லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் முறைகேடு தொடர்பாக முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக விஜய் நாயர், சமீர், அமீத் அரோரா, அருண் பிள்ளை உள்ளிட்டோரின் 76 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை, அமலாக்கத்துறை ஏற்கெனவே முடக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்