பள்ளி இடத்தில் ஆக்கிரமிப்பு.. இடித்து தள்ளிய அதிகாரிகள்

தந்தி டிவி செய்தி எதிரொலியாக, சேலம் மாவட்டம் கோவிந்தகவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பில் இருந்து அரசு அதிகாரிகள் மீட்டனர். காவல்துறை உதவியுடன் வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றினர். இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள ஊர்மக்கள், பெற்றோர், அந்த இடத்தில் ஆரம்ப பள்ளிக்கு தேவையான சமையல் கூடத்தை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com