"சி.பா.ஆதித்தனார் மேல்நிலைப்பள்ளியின் இடம் ஆக்கிரமிப்பு" - மாவட்ட ஆட்சியரிடம் மனு

x

சி.பா.ஆதித்தனார் மேல்நிலைப்பள்ளியின் இடத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளதாக ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் அருகே காயாமொழி கிராமத்தில் உள்ள சி.பா.ஆதித்தனார் மேல்நிலைப்பள்ளியின் விளையாட்டு மைதானத்தினை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளதாகவும், அதனை மீட்டு தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அப்பகுதியில் வரும் 26ம் தேதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்