20 ஆயிரம் பேருக்கு வேலை - தைவான் நாட்டுடன் கைகோர்க்கும் தமிழக அரசு

x

தைவான் நாட்டின் பௌ சென் நிறுவனத்தின், குழுமத்தைச் சேர்ந்த ஹை க்ளோரி ஃபுட்வேர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. சென்னை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இரண்டாயிரத்து 302 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள இந்த திட்டம் மூலம், சுமார் 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உளுந்தூர்பேட்டை தொழிற்பேட்டையில், புதிய உற்பத்தி திட்டம் நிறுவும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்