"May I come In".. திடீரென நுழைந்து ஊர் மக்களை கதறவிட்ட கொம்பன் பாய் - அதிர்ச்சி காட்சிகள்

x

உணவு தேடி ஊருக்குள் நுழைந்த காட்டு யானை கிராமத்தின் தெருக்களில் கம்பீரமாக நடை போட்டு அப்பகுதி மக்களை ஓட ஓட விரட்டிய சம்பவம் கர்நாடக மாநிலம் மைசூரில் நடந்துள்ளது.

மைசூர் மாவட்டத்தின் எச்டி கோட்டை தாலுகாவில் உள்ள பூதனூர் என்ற கிராமத்திற்கு, அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து உணவுதேடி காட்டு யானை ஒன்று புகுந்தது.

கிராமத்தின் தெருக்களில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் உணவை தேடி கம்பீரமாக நடை போட்ட அந்த காட்டு யானையைக் கண்டு கிராம மக்கள் நடுங்கிப் போனார்கள்.

ஒரு சிலர் யானையை விரட்ட முயன்றும் எந்தவித பலனும் இல்லை. மாறாக காட்டு யானை அவர்களை திருப்பி விரட்டியதால் அச்சத்தில் வீட்டுக்குள்ளேயே முடங்கினர்.

இதைத் தொடர்ந்து, தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து யானையை மீண்டும் காட்டுப் பகுதிக்குள் விரட்டினார்கள்.


Next Story

மேலும் செய்திகள்