மின்கம்பிகள் உரசுவதை தடுக்க செங்கலை கட்டி தொங்கவிட்ட மின்வாரிய அதிகாரிகள்

x

கடலூர் அருகே மின்கம்பிகள் உரசுவதை தடுப்பதற்காக, அவற்றில் செங்கலை கட்டி தொங்க விட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. கடலூர் மாவட்டம், வாழைக்கொல்லை கிராமத்தில் வயல்வெளி அருகே, உயர் அழுத்த மின் கம்பிகளும், தாழ்வு அழுத்த மின் கம்பிகளும் ஒன்றோடு ஒன்று உரசி செல்லும் வகையில் உள்ளன. இவற்றை மாற்றியமைத்து, சரியான உயரத்தில் புதிய மின்கம்பிகளை அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், மின்கம்பிகள் உரசாமல் இருப்பதற்காக, அவற்றில் அதிகாரிகள் செங்கற்களை கட்டி தொங்க விட்டுள்ளனர். இதனால், மின்கம்பிகள் அறுந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளின் இச்செயல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்