மின் இணைப்பு எண் + ஆதார் எண்.. தீர்ப்பை ஒத்திவைத்த நீதிபதிகள்

x

மின் இணைப்பை ஆதார் உடன் இணைக்க கோரும் உத்தரவை ரத்து செய்ய கோரிய வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கும் போது வீட்டு உரிமையாளரின் ஆதாரை மட்டுமே இணைக்க முடியும் என்பதால், அரசின் மானியம் வாடகைதாரருக்கு கிடைக்காது என கூறினர்.

இதையடுத்து, வாடகைதாரர்கள் மானியம் பெறும் விஷயம் என்பது உரிமையாளருக்கும், வாடகைதாரருக்கும் இடையிலான பிரச்னை எனவும், மீட்டர் அடிப்படையில் தான் ஆதார் இணைக்கப்படும் என மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், விளக்கம் அளிக்கப்பட்டது.

வாதங்களை கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை டிசம்பர் 19 - ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்