மின்சாரம் தாக்கி மின் ஊழியர் உயிரிழப்பு... மின் இணைப்பு கொடுக்கும் போது நேர்ந்த விபத்து

x

திருச்சி மாவட்டம் கீரம்பூர் கிராமத்தில், மின்சாரம் தாக்கி மின் ஊழியர் உயிரிழந்துள்ளார்.

மின் ஊழியரான குமணன் என்பவர், புதிய மின் இணைப்பு கொடுப்பதற்காக மின் கம்பத்தில் ஏறி உள்ளார்.

அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி மின் கம்பத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி, விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்