திடீரென நின்ற மின்சார ரயில்கள்..! கோளாறான சிக்னல்...!

x

சென்னை எழும்பூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் முதுநகர் எக்ஸ்பிரஸ் ரயில், விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு நேற்று இரவு 10 மணியளவில் வந்து சேர்ந்தது. அங்கிருந்து 10.15க்கு ரயில் கிளம்ப தயாரான போது, ரயில்வே சிக்னலில் பாயிண்ட் பெயிலராகி கோளாறு ஏற்பட்டது. உடனே, ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சென்று சிக்னலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே, சென்னை எழும்பூரில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலும், திருநெல்வேலி செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலும் விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு ரயில்வே சிக்னலை அதிகாரிகள் சரி செய்த நிலையில், சில மணி நேர தாமதத்திற்கு பிறகு மூன்று எக்ஸ்பிரஸ் ரயில்களும் கிளம்பி சென்றன.


Next Story

மேலும் செய்திகள்