20 பேரை துடிதுடிக்க கொன்று, 300 கடைகளை அடித்து நொறுக்கிய அரிக்கொம்பன் யானையை பிடிக்கும் பணி தீவிரம்

x

கேரள மாநிலம் மூணாறு அருகே 20க்கும் மேற்பட்ட நபர்களை கொன்றதோடு, 300க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வீடுகளை அடித்து நொறுக்கிய அரிக்கொம்பன் யானையை பிடிக்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. உச்ச நீதிமன்ற வழிகாட்டு குழுவின் உத்தரவுப்படி, வனத்துறை தலைமை மருத்துவர் தலைமையில் 180 பேர் கொண்ட 8 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சிமெண்ட் பாலம் அருகே இருக்கும் யானைக்கு 20 நபர்கள் மயக்க ஊசி செலுத்த தயாராக இருக்கும் சூழலில், பிடித்த பிறகு கும்கி யானை உதவியுடன் பாதுகாப்பாக வேறு இடத்திற்கு மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்