சிபிஎஸ்இ-யில் தாய்மொழியில் கல்வி.. அமித்ஷா சொன்ன அதிரடி கருத்து

x

தாய்மொழியில் கல்வி கற்பது சிந்திக்கும் திறனை மட்டுமல்லாது ஆராய்ச்சிக்கான காரணங்களையும் அதிகரிக்கும் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமித்ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், தாய் மொழியில் கல்வி வழங்க முடிவு செய்திருக்கும் சி.பி.எஸ்.இ முடிவு வரவேற்புக்குரியது என்றும், இதற்காக கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த முடிவின் மூலம், அதிக அளவிலான மாணவர்கள் சி.பி.எஸ்.இ மூலம் கல்வி கற்பார்கள் என்றும் அமித்ஷா தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்