"பொருளாதார இடஒதுக்கீடு...பாஜக அரசை ஆதரிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு" - கே.பாலகிருஷ்ணன்

x

சென்னை பெரம்பூரில், வடசென்னை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செஞ்சட்டை பேரணி நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான பெண்கள், குழந்தைகள் செஞ்சட்டை அணிந்து கையில் பதாகைகள் ஏந்தி பேரணி சென்றனர். இதில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பொருளாதார இடஒதுக்கீடு விவகாரத்தில் பாஜக அரசை ஆதரிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவெடுத்ததாக தெரிவித்தார். மேலும் கூட்டணி கட்சிகள் தனித்தனி கொள்கைகளை கொண்டிருப்பதால், எல்லா பிரச்சனைகளையும் ஒரே மாதிரி கையாள முடியாது எனவும் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்