தொடர் விடுமுறை எதிரொலி... திடீரென படையெடுத்த மக்கள் கூட்டம் - ஸ்தம்பித்து போன கோயம்பேடு பேருந்து நிலையம்

x

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ் புத்தாண்டு மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக, போக்குவரத்துறை சார்பில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சேலம், திருச்சிக்கு குறைவான பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்