"வீட்டு ஓனர்களுக்கு தெரியாமலேயே EB நம்பருடன் ஆதார் இணைப்பு" - ஷாக்கான மின் வாரியம்

x

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதில் ஏற்பட்ட குளறுபடிகளால் மின்வாரியம் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

நேற்று இரவு 7 மணி நிலவரப்படி மின் இணைப்புடன் ஆதார் எண்ணை 97.98 சதவீதம் பேர் இணைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இப்பணியை ஆய்வு செய்ததில், உரிமையாளர், குத்தகைதாரர், இணை உரிமையாளரின் ஆதார் எண்கள் அவர்களுக்குத் தெரியாமலேயே மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது...

ஆதார் இணைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது என்பதை காட்டுவதற்காகவே அதிகளவிலான மின் இணைப்பு எண்களுடன் தொடர்பில்லாத ஆதார் எண்கள் இணைக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற செயல்கள் மூலம் திட்டத்தின் நோக்கமே தோற்கடிக்கப் பட்டுள்ளதாக மின்வாரியம் காட்டம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர்களின் ஆதார் எண் மட்டுமே மின் இணைப்பு எண்களுடன் இணைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என கூறியுள்ள மின்வாரியம், உயரதிகாரிகள் தனி கவனம் செலுத்தி, பணி குறித்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என அனைத்து பகிர்மான பிரிவு தலைமை பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்