வருமானம் இல்லாததால் அரளி விதையை அரைத்து குடித்து பெண் தற்கொலை

x

தாம்பரம் அருகே போதிய வருமானம் இல்லாததால் பெண் அரளி விதையை அரைத்துக் குடித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எம்.ஜி.ஆர் நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் படவீட்டாள், ஏழுமலை என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். வேலை இல்லாததால் குழந்தைகளை வளர்க்க முடியாமல் இத்தம்பதி தவித்து வந்துள்ளனர். விரக்தியில் இருந்து வந்த படவீட்டாள் வீட்டு வாசலில் இருந்த அரளிச் செடி விதைகளை அரைத்துக் குடித்ததில் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்