குடிபோதையில் வகுப்பறையை கற்களை வீசி சேதப்படுத்திய இளைஞர்கள் - ஆப்பு வைத்த போலீஸ்

x

அரசுப் பள்ளி வகுப்பறையை சேதப்படுத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே செயல்பட்டு வரும் அரசு பள்ளி வகுப்பறையின் கதவுகளை, சிலர் சேதப்படுத்தும் காட்சிகள் தற்போது வேகமாக பரவி வந்தது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில், ஏழுமலை, பிரபாகரன் மற்றும் நாராயணன் ஆகிய 3 பேர் பள்ளியை சேதப்படுத்தியது தெரிய வந்தது.

மேலும், இவர்கள் மூவரும் கடந்த அக்டோபர் மாதம் 24-ஆம் தேதி மது அருந்திவிட்டு, அன்றைய தினம் வகுப்பறையை சேதப்படுத்தியது கண்டறியப்பட்டது.

தற்போது ஏழுமலை கைது செய்யப்பட்ட நிலையில், இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்