குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்கு - காவல்துறை சொன்ன தகவல்

x

குடிபோதையில் வாகனம் ஓட்டி நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு, சுமார் 13 கோடி வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 4 மாதங்களில் நிலுவையில் இருந்த, 12 ஆயிரத்து 551 குடிபோதை வழக்குகள் தீர்க்கப்பட்டு, சுமார் 13 கோடி வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி, அபராதம் செலுத்தாதவர்களின் சம்பந்தப்பட்ட வாகனத்தை பறிமுதல் செய்ய, நீதிமன்றங்களில் ஆணை பிறப்பிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது..


Next Story

மேலும் செய்திகள்