"நாங்க போவோம் இல்ல மல்லாக்க படுப்போம்".. நடுரோட்டில் லுங்கியுடன் போலீசாருடன்... போதை ஆசாமி அட்ராசிட்டி

x

விருத்தாச்சலம் காவல் நிலையம் முன்பு மது போதையில் ரகளையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நரிக்குறவர் காலனியைச் சேர்ந்தவர் அருள்பாண்டி தேவ்.

இவர் தனது மாமியாரை தாக்கியதாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில், அருள்பாண்டி தேவ்-வை விசாரணைக்காக அழைத்து வந்த போது அவர் மது போதையில் இருந்ததால், போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்டு சாலையின் குறுக்கே சென்று படுத்தார்.

இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்