பிரதமர் வீட்டின் மேல் ட்ரோன்.. பதற்றத்தில் தலைநகரம்

x

டெல்லியில், பிரதமர் மோடி இல்லம் அமைந்துள்ள பகுதியில் ட்ரோன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ இல்லம் டெல்லி லோக் கல்யாண் மார்க் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு, இன்று அதிகாலை 5 மணியளவில், ட்ரோன் பறந்ததாக, பிரதமர் மோடியின் பாதுகாப்பு படை பிரிவான எஸ்.பி.ஜி. சார்பில், டெல்லி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பிரதமர் மோடியின் இல்லம் அமைந்துள்ள பகுதிகள் No-Fly Zone பகுதியில் வருவதால், இதுபோன்ற ட்ரோன்கள் மற்றும் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் இல்லத்தின் மீது ட்ரோன் பறந்ததாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக டெல்லி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்