மதுபோதையில் காரை இயக்கி இருசக்கர வாகனம் மீது மோதல்.. பிரீத் அனலைசர் கருவியில் ஊதாமல் அடம்பிடித்த போதை ஆசாமி

x

மதுரையில் பிரித்விராஜ் என்பவர் மதுபோதையில் காரை இயக்கிய நிலையில், பைபாஸ் சாலை அருகே இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளார். இதனால் அதில் பயணித்த 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து பிரித்விராஜை மடக்கிப்பிடித்த போலீசார், பிரீத் அனலைசர் கருவி கொண்டு சோதனை செய்ய முயன்றனர். ஆனால் சுமார் 2 மணி நேரம் சாலையில் படுத்தும், காரினுள் படுத்தவாறும் கருவியில் ஊதாமல் பிரித்விராஜ் போலீசாரிடம் போக்குக்காட்டினார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்